2 ஆண்டுகளுக்குப் பின் மதுரை சித்திரை திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி அளித்ததால் உற்சாகம்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழாவில் ஏப்ரல் 16-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கொடியேற்றம், திருக்கல்யாணம், திக்விஜயம் உள்ளிட்ட விழாக்கள் பக்தர்கள் அனுமதி இல்லாமல் நடைபெற்றது. மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு, கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. கொரோனா தொற்று குறைந்திருப்பதால்  இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழாவில் ஏப்ரல் 12-ம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், ஏப்ரல் 13-ம் தேதி திக்விஜயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், ஏப்ரல் 15-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டமும், அன்று மாலை கள்ளழகர் எதிர்சேவையும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 16-ம் தேதி காலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் நடைபெறுகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை திருவிழாவில் மக்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.         …

Related posts

கோயில் நந்தவனங்களை பாதுகாக்க நடவடிக்கை: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

கொட்டி தீர்த்தது கன மழை; குன்னூரில் மண் சரிவில் சிக்கி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு: கணவர், 2 மகள்கள் உயிர் தப்பினர்

புதுவை அரசின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக `குரங்கு பெடல்’ தேர்வு: 4ம் தேதி விருது வழங்கப்படுகிறது