2 வாலிபர்கள் குண்டாசில் சிறையிலடைப்பு

 

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 2 பேரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். வந்தவாசி தாலுகா, சோரப்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகுல் (20), குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் முகமது அஸ்வாக் (21) ஆகிய 2 பேர் மீது, ஒரகடம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், கடந்த மாதம் வழிப்பறி வழக்கு ஒன்றில் 2 பேரையும், ஒரகடம் போலீசார் கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் எஸ்பி சண்முகம் பரிந்துரையின்படி, கலெக்டர் கலைச்செல்விமோகன் மேற்கண்ட 2 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.அதன்படி, ஒரகடம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், அதற்காக ஆணையினை வேலூர் மத்திய சிறை அதிகரிகளிடம் வழங்கி, தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை