2 லாரிகளில் மண் கடத்திய இருவர் கைது

போச்சம்பள்ளி, ஆக.26: மத்தூர் இன்ஸ்பெக்டர் கெளதம் மற்றும் போலீசார், தொகரப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியில் இருந்த தொகரப்பள்ளியை சேர்ந்த பலராமன்(52), மணி(77) ஆகியோரை கைது செய்து, 4 யூனிட் மணலுடன் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய அதே பகுதியை சேர்ந்த பிரபு என்பவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை