2 மகள்களுடன் இளம்பெண் மாயம்

தர்மபுரி, மார்ச் 15: பெரும்பாலை அருகேயுள்ள நாகமரத்துப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் பெங்களூருவில் கூலிவேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்தம்மாள் (32). இவர்களுக்கு தேவிகா (16), ராஜேஸ்வரி (14) என 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஈஸ்வரன் வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 8ம்தேதி, அந்த பகுதியில் உள்ள சிவன் கோயிலில் நடந்த தெருக்கூத்தை பார்ப்பதற்காக, முத்தம்மாள் தனது 2 மகள்களுடன் சென்றார். பின்னர், அவர்கள் 3பேரும் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர்களை எங்கு தேடியும் கிடைக்காததால், இதுபற்றி ஈஸ்வரன் பெரும்பாலை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

உறுப்பினர்களுக்கு டெபாசிட் தொகை

நாட்டுக்கோழிகள் வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம்

செம்பனார்கோயில் பகுதியில் வாழை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்