குமாரபாளையம், ஜன.10: குமாரபாளையம் கம்பர் தெருவை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி சூர்யநாராயணன்(62). இவர் கடந்த மாதம் 26ம்தேதி தனது டூவீலரில் அரசு மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனை முன்பு நிறுத்தி விட்டு சிகிச்சைக்காக சென்றார். மருத்துவரை பார்த்துவிட்டு, மருந்துகளை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தபோது, அவரது டூவீலர் திருடு போயிருந்தது. இதேபோல் பவானி குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சுரேஷ்(41). இவர் கடந்த 21ம்தேதி குமாரபாளையம் புளியமரத்து ஒயின்ஷாப் எதிரே தனது டூவீலரை நிறுத்திவிட்டு ஓட்டலில் சாப்பிட சென்றுள்ளார். திரும்பி வந்தபோது டூவீலர் திருடு போயிருந்தது. இதுகுறித்து சூரியநாராயணன், சுரேஷ் ஆகிய இருவரும் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தன்ர. அதன்பேரில் எஸ்ஐ சந்தியா வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.