2 குழந்தைகளுடன் பெண் மாயம்

அரூர், ஜூலை 13:கம்பைநல்லூரை சேர்ந்தவர் அனிப் (32). மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி பர்கத்பீ (31). இவர்களுக்கு நஸிரின் (11), நஜீர் (4) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். பர்கத்பீ கடந்த ஒரு வருடமாக அதே பகுதியில் உள்ள ஒரு கார்மெண்ட்சில் வேலைக்கு சென்று வந்துள்ளார். அவர் வேலைக்கு செல்வது அனிப்பிற்கு பிடிக்காததால், வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. இது குறித்து வீட்டில் பிரச்னை இருந்து வந்துள்ளது. கடந்த மாதம் 29ம் தேதி பர்கத்பீ குழந்தைகளை பள்ளிக்கு விட சென்றுள்ளார். அனிப் வேலைக்கு சென்றுவிட்டார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லை. அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து அனிப் கம்பைநல்லூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்