Monday, August 5, 2024
Home » 2வது மனைவியின் 14 வயது மகளிடம் பாலியல் சீண்டல் நகைக்கடை ஊழியர் போக்சோவில் கைது குடியாத்தம் அருகே

2வது மனைவியின் 14 வயது மகளிடம் பாலியல் சீண்டல் நகைக்கடை ஊழியர் போக்சோவில் கைது குடியாத்தம் அருகே

by Karthik Yash

குடியாத்தம், ஜூலை 13: குடியாத்தம் அருகே 2வது மனைவியின் 14 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நகைக்கடை ஊழியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பொன்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேஷ்(50). குடியாத்தம் நகைக்கடை பஜாரில் உள்ள தனியார் நகைக்கடையில் ஊழியராக உள்ளார். இவரது முதல் மனைவி விவகாரத்து பெற்று, வேறொருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, கணேஷ் ஏற்கனவே விவாகரத்து பெற்ற பவானி சங்கரி என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். பவானி சங்கரியின் முதல் கணவனுக்கு பிறந்த 14 வயது மகள் அவரது உறவினர் வீட்டில் வளர்ந்து வருவதுடன் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று அந்த மாணவி தனது தாயை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, யாரும் இல்லாத நேரத்தில் கணேசன் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, நடந்த சம்பவம் குறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மாணவி கொடுத்த புகாரின்பேரில், குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2வது மனைவியின் மகளிடம் நகைக்கடை ஊழியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

thirteen − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi