2வது திருமணம் செய்த விவசாயி குத்திக்கொலை: முதல் மனைவி, மகன் கைது

கீழக்கரை: கீழக்கரை அருகே இரண்டாவது திருமணம் செய்த விவசாயியை குத்திக்கொன்ற மனைவி, மகனை போலீசார் கைது செய்தனர். கீழக்கரை அருகே நத்தம் குளபதம் பகுதியைச் சேர்ந்த விவசாயி வையக்கிழவன் (58). விவசாயி. இவரது முதல் மனைவி சுப்புலட்சுமிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், வெள்ளா கிராமத்தைச் சேர்ந்த ராமலட்சுமியை (25), கடந்த சில மாதங்களுக்கு முன் வையக்கிழவன் 2வதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த திருமணம் பற்றி வீட்டுக்கு தெரிய வரவே குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. நேற்று காலை விவசாய வேலைக்கு சென்ற வையக்கிழவனிடம், மனைவி சுப்புலட்சுமி (54), மகன் வசீந்திரன் (26) ஆகியோர் சேர்ந்து வையக்கிழவனை சரமாரியாக தாக்கினர். இரும்பு கம்பியால் மார்பில் குத்தியதில் அவர்  உயிரிழந்தார். …

Related posts

கோயம்பேடு சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியவர் கைது

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!