2வது திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர்: முதல் மனைவி போலீசில் புகார்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூர் தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் மகிமைநாதன் (52). இவரின் மனைவி அரசு (52). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகிமைநாதன் மாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும், அரசு தீர்த்தமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த விஜயலட்சுமி (48) என்பவருடன் மகிமைநாதனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து அரசுக்கு தெரியாமல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமியை மகிமைநாதன் அனுமந்தீர்த்ததில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். பின்னர் விஜயலட்சுமியை வெண்ணாம்பட்டியில் உள்ள ஹவுசிங் போர்டில் வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்துள்ளார். இந்த நிலையில், அரசுவிடம் அடிக்கடி மகிமைநாதன் தகராறு செய்து வந்துள்ளார். இதற்கிடையே, மகிமைநாதன் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படம் அரசுக்கு கிடைத்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது, உன்னை தூக்கில் தொங்க விட்டு விடுவேன் என அரசுவிடம் மகிமைநாதன் தெரிவித்ததாக தெரிகிறது. இதுகுறித்து அரசு, அரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மகிமைநாதன், விஜயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்….

Related posts

வீட்டில் இருந்து திருடிய ஏடிஎம் கார்டு மூலம் ரூ.70 ஆயிரம் அபேஸ்

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது