திருப்பூர்: பல்லடம் அருகே சித்தம்பலம் பகுதியில் பைக் வாங்கித்தராததால் 19 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தாயிடம் தொடர்ந்து கே.டி.எம். எனும் பைக் வாங்கி கேட்ட நிலையில், அவர் மறுத்ததால் உடுமலை சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் தற்கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.