Sunday, June 30, 2024
Home » 1980களில் பிரபலமான கோலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் மும்பையில் திடீர் சந்திப்பு

1980களில் பிரபலமான கோலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் மும்பையில் திடீர் சந்திப்பு

by kannappan

சென்னை: கடந்த 1980களில் திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகர், நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் நேரில் சந்தித்து தங்கள் நட்பைக் கொண்டாடி வந்தார்கள். ‘1980 ரீ-யூனியன்’ என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியின் 10ம் ஆண்டுக்கான கொண்டாட்டத்தை 2019ல் சிரஞ்சீவி தனது ஐதராபாத் வீடு ஒன்றில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். அனைவருடைய மனதிலும் நீங்காத நினைவாக அந்த நிகழ்ச்சி இடம்பெற்றது. இதையடுத்து அடுத்த வருட நிகழ்ச்சிக்கு அனைவரும் காத்திருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக,  கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் ‘1980 ரீ-யூனியன்’ நிகழ்ச்சி நடத்த முடியாமல் போனது. தற்போது 3 வருட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மும்பையில் அனைவரும் சந்தித்தார்கள். பாலிவுட் நட்சத்திரங்கள் பூனம் தில்லான், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் 4 தென்மாநிலங்களை சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு விருந்தளித்து உபசரித்தனர். அப்போது பாலிவுட்டை சேர்ந்த தங்கள் நண்பர்கள் சிலரையும் நேற்று முன்தினம் மாலை நடந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் சில குறிப்பிட்ட வண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடிகைகளுக்கு வெள்ளி மற்றும் ஆரஞ்சு நிறமும், ஆண்களுக்கு சாம்பல் மற்றும் ஆரஞ்சு நிறமும் அறிவிக்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பூனம் தில்லான், ஜாக்கி ஷெராஃப் மேற்கண்ட வண்ணங்களில் அரங்கை தயார் செய்து விருந்தினர்களை வரவேற்றனர். தேர்ந்து எடுக்கப்பட்ட மகாராஷ்டிரா, உள்ளூர் உணவுகளுக்கு இந்த நிகழ்ச்சியில் முக்கிய பங்கு இருந்தது. விடியற்காலை வரை நடந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய நடிகர், நடிகைகள் இணைந்து கலை நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்றனர். விளையாட்டு மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிக்கு பூனம் தில்லான் ஏற்பாடு செய்தார். நட்பு, தோழமை, வேடிக்கை நிறைந்த ஒரு மாலைப்பொழுதாக இந்த ரீ-யூனியன் நிகழ்ச்சி அமைந்தது. இதில் நடிகர்கள் அனுபம் கெர், ராஜ்குமார் சேதுபதி, சரத்குமார், சிரஞ்சீவி, கே.பாக்யராஜ், வெங்கடேஷ், அர்ஜூன், ஜாக்கி ஷெராஃப், அனில் கபூர், சன்னி தியோல், சஞ்சய் தத், நரேஷ், பானுசந்தர் மற்றும் நடிகைகள் சுஹாசினி, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், லிசி, ராதா, பூர்ணிமா பாக்யராஜ், அம்பிகா, சரிதா, சுமலதா, ஷோபனா, ரேவதி, மேனகா, பூனம் தில்லான், பத்மினி.கே, வித்யா பாலன், நதியா, டினா அம்பானி, மது பாலா, மீனாட்சி சேஷாத்திரி பங்கேற்று சிறப்பித்தனர். நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான மாதவன் கலந்துகொண்டு அனைவரையும் வாழ்த்தினார்….

You may also like

Leave a Comment

nineteen − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi