திருவள்ளுர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை. திருவள்ளுர் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 19ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். எனவே இக்கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி, முககவசம் அணிந்து விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிக்கும் ஏற்படும் குறைகளுக்கு தீர்வு காணலாம் என கூறப்பட்டுள்ளது….