19ம்தேதி பேளுக்குறிச்சி வாரச்சந்தைக்கு விடுமுறை

சேந்தமங்கலம், ஏப்.13: சேந்தமங்கலம் ஒன்றியம், பேளுக்குறிச்சி ஊராட்சியில் புகழ்பெற்ற மளிகை பொருட்கள் வாரச்சந்தை மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் வந்து, ஓராண்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிச்செல்கின்றனர். வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை 9 மணி வரை, சந்தை நடைபெறுவது வழக்கம். விடிய, விடிய நடைபெறும் சந்தையில், கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெறும். இந்நிலையில், வருகிற 19ம்தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பேளுக்குறிச்சி மளிகை பொருட்கள் வாரச்சந்தை கூடுவதற்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் உமா உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, அன்றைய தினம் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்