கோவை,ஜூலை 17: கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மறுநாள் (19ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குவாட்டர்ஸ், கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி ராவ் நகர், காமதேனு நகர், பிஎஸ்ஜி எஸ்டேட், பிஎஸ்ஜி மருத்துவமனை, நேரு வீதி,
அண்ணா நகர், ஆறுமுகம் லே அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், எல்லை தோட்டம், வி.ஓ.சி காலனி, பி.கே.டி நகர், அகிலாண்டேஸ்வரி நகர், தாமு நகர், பாலசுப்ரமணிய நகர், பால குருகார்டன், செளரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு(ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் ரோடு, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என கோவை மின் பகிர்மான செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.