182வது வார்டில் அனைத்து வீடுகளுக்கும் பட்டா: திமுக வேட்பாளர் ம.ஆறுமுகம் உறுதி

துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி பெருங்குடி 14வது மண்டலம் 182வது வார்டு திமுக வேட்பாளர் ஆறுமுகம் கொட்டிவாக்கம், எம்ஜிஆர் நகர் பகுதியில் நேற்று வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவருக்கு பொதுமக்கள் மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது, வேட்பாளர் ஆறுமுகம் பேசுகையில், `இப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும். பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தரமான சாலை, கொசு ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் ஏற்படுத்தப்படும். குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்படும்’ என தெரிவித்தார்.இந்த பிரசாரத்தின்போது வட்ட செயலாளர் வெங்கடேசன், ரமேஷ், கதிர் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்….

Related posts

சொல்லிட்டாங்க…

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக ஆலோசனை !!