180 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

நாமக்கல், செப்.13: நாமக்கல் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 180 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றிய போலீசார், டிரைவர் கைது செய்தனர். நாமக்கல் -பைபாஸ் சாலை, நல்லிபாளையம் இணைப்பு சாலையில் நேற்று நல்லிபாளையம் போலீசார் திடீர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, பழைய பேப்பர் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 6 மூட்டைகளில் 180 கிலோ ஹான்ஸ் எனப்படும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு போலீசார் திடுக்கிட்டனர். உடனே, அதனை கைப்பற்றினர். இதுதொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த தேனி மாவட்டம் சில்லுமரத்துப்பட்டியை ஜெயபாலை(40) என்பவரை கைது செய்தனர். விசாரணையில், ஓசூரில் இருந்து ஹான்ஸ் பாக்கெட்டுகளை கடத்தி வருவது தெரிய வந்தது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்