18 வயது பெண்ணை வீட்டில் அடைத்து கூட்டு பலாத்காரம்: வெளியே அழைத்துச் சென்றும் சீரழித்த கொடூரம்


கோவை: இளம்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பல நபர்களுடன் உல்லாச அனுபவிக்க வைத்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 18 வயது பெண். இவருக்கும் அவரது ஊர் அருகே உள்ள ஒருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 1 மாதமாக இளம்பெண்ணை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் இளம்பெண் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் பகுதியில் நின்று கொண்டிருப்பதாக அவ்வழியே சென்றவர்கள் அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து இளம்பெண்ணை மீட்ட உறவினர்கள் அவரிடம் விசாரித்ததில், தன்னை பல நபர்கள் பலாத்காரம் செய்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதுகுறித்து உறவினர்கள் இளம்பெண்ணுடன் சென்று மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே திருமணமான சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து இளம்பெண் தனது கணவரை பிரிந்து அப்பகுதியில் தனியே வசித்து வந்துள்ளார். அப்போது, அவருக்கும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சிவனேஷ் பாபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் இளம்பெண்ணிடம் நீ இங்கு தனியாக இருக்க வேண்டாம், என்னுடன் வந்து விடு என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பிய இளம்பெண்ணும் அவருடன் சென்றுள்ளார். இதையடுத்து சிவனேஷ் பாபு மேட்டுப்பாளையம் ராமசாமி நகரில் தனியாக வீடு எடுத்து அங்கு குடியமர்த்தி உள்ளார். இதை தொடர்ந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற சிவனேஷ் பாபு வீட்டின் கதவை பூட்டிவிட்டு சென்றார்.

இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து சிவனேஷ் பாபு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருடன் மற்றொரு வாலிபரும் உடன் வந்துள்ளார். அவர் யார் என இளம்பெண் கேட்ட போது தனது நண்பர் ராகுல் எனவும், மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார் என தெரிவித்துள்ளார். சிறிது நேரம் அவரிடம் பேசிக்கொண்டிருந்த அவர்கள் திடீரென இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், இருவரும் இளம்பெண்ணை மிரட்டி, அடித்து தாக்கி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

தொடர்ந்து இருவரும் இளம்பெண்ணை வீட்டுக்குள் அடைத்து வைத்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இளம்பெண்ணை வெளியில் அழைத்துச்செல்வதாக கூறி பல்வேறு இடங்களுக்கும் அழைத்து சென்று தாங்கள் கூறும் நபர்களுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும், இல்லை என்றால் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதற்கு அவர் மறுக்கவே அடித்து துன்புறுத்தி உள்ளனர். தொடர்ந்து மிரட்டி பல்வேறு நபர்களுக்கும் இளம்பெண்ணை விருந்தாக்கி உள்ளனர். கடந்த 1 மாதத்திற்கு மேலாக இளம்பெண்ணை வீட்டிற்குள் அடைத்து வைத்தும், வெளியில் அழைத்துச்சென்றும் பல நபர்களுடன் இளம்பெண்ணை உல்லாசம் அனுபவிக்க வைத்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் அவர்களது தொல்லை அதிகரிக்கவே இளம்பெண் அவர்களிடமிருந்து தப்பி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வந்தது தெரிய வந்தது. இவ்வாறு போலீசார் கூறினர். இதனையடுத்து போலீசார் சிவனேஷ் பாபு, மெக்கானிக் ராகுல் உள்ளிட்டோரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருந்த மெக்கானிக் ராகுலை போலீசார் கைது செய்தனர். சிவனேஷ் பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 1 மாதத்திற்கு மேலாக இளம்பெண்ணை வீட்டிற்குள் அடைத்து வைத்தும், வெளியில் அழைத்துச்சென்றும் பலருடன் இளம்பெண்ணை உல்லாசம் அனுபவிக்க வைத்துள்ளனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி