ஸ்ரீபெரும்புதூர்: பெரும்புதூர் அருகே மணிமங்கலம் அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் பாபு. இவரது உதவியாளர் சுரேஷ். கடந்த சில நாட்களுக்கு தனது வீட்டுமனைக்கு என்ஓசி சான்று வழங்க வேண்டும் என விஏஓ பாபுவிடம் சென்னையை சேர்ந்த ஒருவர் மனு அளித்தார். அதற்கு, வீட்டுமனைக்கு என்ஓசி வழங்க ₹20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என உதவியாளர் சுரேஷ் கேட்டுள்ளார்.இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மனுதாரர், சென்னை லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைப்படி, விஏஓ சுரேஷுக்கு ‘கூகுள் பே’ மூலம் ₹18 ஆயிரம் அனுப்பினார்.இதைதொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், நேற்று முன்தினம் என்ஓசி சான்று வழங்க ₹18 ஆயிரம் லஞ்சமாக பெற்ற விஏஓ பாபு, உதவியாளர் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்….