17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை: கணவன் மீது 4 பிரிவில் வழக்கு

சென்னை: கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி சுமதி. இவர்களது 17 வயது மகளுக்கு,  அதே பகுதியை சேர்ந்தவர் முருகனை (28) கடந்த ஆண்டு, இருவீட்டார் சம்மதத்துடன்  திருமணம் செய்து வைத்துள்ளனர். பின்னர் அவர்கள் அதே பகுதியில் தனியே வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். கடந்த மாதம் 25ம் தேதி சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு, சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது, மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுமிக்கு சட்ட விரோதமாக திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. உடனே இதுபற்றி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில், 16 வயதில் அச்சிறுமிக்கு திருமணம் நடந்ததும், தற்போது குழந்தை பிறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் கணவர் முருகன் மீது போக்சோ உட்பட 4 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களுடைய பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். இதையறிந்த 5 பேரும் தலைமறைவாகினர்.  கடந்த 2 தினங்களுக்கு முன்,  எழும்பூர் அரசு மருத்துவமனையில், 16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து,  திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் கணவர் பிரகாஷ் (25) மீது, போக்சோ உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மற்றும் இவர்களுடைய பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான 10 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்….

Related posts

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!!

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் பரபரப்பு மனைவி கத்தியால் குத்தி கொலை: நாடகமாடிய கணவன் கைது