மேட்டூர், செப்.17: மேச்சேரி அருகே, வெள்ளார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் ராஜா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சத்தியா, பட்டதாரி ஆசிரியர் பிரபாகரன், மேலாண்மை குழு தலைவர் பிரதீபாராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் சண்முகம் வரவேற்று பேசினார். விழாவில், மேட்டூர் சதாசிவம் எம்எல்ஏ கலந்து கொண்டு 169 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லாததால், புதிய வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். இவ்விழாவில், உதவி தலைமை ஆசிரியர்கள் செந்தில்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் அன்னபூரணி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சுதா, மணிவன்னன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
169 மாணவர்களுக்கு இலவச சைக்கிகள்
previous post