ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் 163வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பூங்கொடி ஜெகதீஸ்வரன், ஆதம்பாக்கம் மண்ணடி அம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, நியூ காலனி, மஸ்தான் கோரி தெரு, ராமகிருஷ்ணபுரம், பாலகிருஷ்ணாபுரம், ஏரிக்கரை தெரு, பழண்டியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்தால் 163வது வார்டில் ஆரம்ப சுகாதார மையம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கட்டிடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், இளைஞர்களுக்கு உடற்பயிற்சி மையம் போன்றவற்றை அமைத்து தருவேன். மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன்,’’ என்றார். வாக்கு சேகரிப்பின்போது, திமுக சார்பில் வட்ட செயலாளர் வேலவன், பெருமாள், சங்கர், ஜெயக்குமார், கே.ஜி ரவிச்சந்திரன், சவுந்தரி, கந்தன், பூவராகவன் உதயகுமார், சுப்புராஜ், அருண்ராஜ், ரகு, கு.விஜயன், விஜய்பாபு, அறிவுசெல்வம், ரங்கன், புறா பாண்டியன், ஷீலா வின்சென்ட், விக்னேஷ், வினோத், சதிஷ், காங்கிரஸ் சார்பில் நேரு ரோஜா, சமையல் குமார், சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி சசிகுமார், பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்….
163வது வார்டு பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு உடற்பயிற்சி மையம்: பூங்கொடி ஜெகதீஸ்வரன் வாக்குறுதி
previous post