Thursday, July 4, 2024
Home » காதலித்ததால் 16 வயது மகளை ஆணவக்கொலை செய்த தந்தை: மகளை கொன்று உடலை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்

காதலித்ததால் 16 வயது மகளை ஆணவக்கொலை செய்த தந்தை: மகளை கொன்று உடலை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்

by Lavanya

பஞ்சாப்: பஞ்சாபில் ஒரு நாள் நண்பர் வீட்டில் தங்கிவிட்டு வீடு திரும்பிய தனது 16 வயது மகளை தொழிலாளி ஒருவர் அடித்து கொலை செய்து உடலை பைக்கில் கட்டி இழுத்து சென்ற சம்பவம் காண்போரை கொலைநடுங்க வைத்துள்ளது. இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் முச்சல் என்ற கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.

தனது 16 வயது மகள் இரவு வீடு திரும்பாத நிலையில் அடுத்தநாள் காலையில் தனது காதலனுடன் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை அந்த இளைஞரை அடித்து துரத்திவிட்டு தனது மகளை இரும்பு கம்பியாலும், கையாளும் அடித்து கொலை செய்தார். பின்னர் பைக்கின் பின் புறத்தில் கட்டி ஊருக்குள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வேகமாக இழுத்து சென்றார்.

இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தனது மகளின் உடலை ரயில்வே தண்டவாளத்தில் அந்த கொடூர தந்தை வீசிவிட்டு வீடு திரும்பினார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த கொலை குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தின் கட்டுப்பாட்டை மீறி காதலித்ததால் அவரது தந்தையே தனது மகளை ஆணவக்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

You may also like

Leave a Comment

16 + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi