15 எய்ம்ஸ்களும்… ஒரு செங்கல்லும்…: பட்ஜெட் குறித்து மதுரை எம்.பி கிண்டல்

மதுரை: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை குறித்து, மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதளத்தில் ‘15 எய்ம்ஸ்களும், ஒரு செங்கல்லும்’ என்று கிண்டலாக கருத்து வெளியிட்டுள்ளார்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்து 9 ஆண்டுகளும், அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகளும் ஆன நிலையில் இன்னும் அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.

இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில், ‘‘கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். ஒரு சிறு திருத்தம். 15 எய்ம்ஸ்களும்… ஒரு செங்கல்லும்’’ என தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்