1550 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

நாமக்கல், செப்.20: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பக்தவத்சலம் நகரில், ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக, குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு தலா 50 கிலோ எடை கொண்ட 31 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில், 1550 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ரேஷன் அரிசியை பதுக்கிய, தொட்டிப்பட்டியை சேர்ந்த முருகன்(28) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்