15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் மாலத்தீவு மாஜி அமைச்சர் இலங்கையில் அதிரடி கைது: பெரிய கும்பலே சிக்கியது

துபாய். சென்னையில் 15 வயது சிறுமியை வாலிபர்கள் முதல் வயதான தாத்தாக்கள் வரை பலர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்ற சம்பவம், இலங்கயைிலும் நடந்துள்ளது. ஆனால், இது சற்று வித்தியாசமான சம்பவம்.  கடந்த மாதம் 7ம் தேதி 15 வயது சிறுமியை இணையதளம் மூலம் விற்பனை செய்ததாக இலங்கையில் உள்ள கொழும்பு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் 15 வயது சிறுமியை பெரிய கும்பலே பாலியல் பலாத்காரம் செய்து இருப்பதும், இதில் மாலத்தீவு முன்னாள் நிதி அமைச்சர் முகமது அஷ்மலி உள்பட 32  பேர் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இவர்கள் இணையதளம் மூலமாக தொடர்பு கொண்டு சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக, அஷ்மலி, உள்ளூர் அரசியல்வாதிகள், கப்பல் தலைமை அதிகாரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை வரும் 16ம் தேதி வரை காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தவிட்டது. சிறுமியை பாலியலுக்கு தொழிலுக்கு விற்க விளம்பரம் செய்த இணையதள நிர்வாகிகளும்  கைது செய்யப்பட்டனர். மசாஜ் செய்யவே இணையதளம் மூலம் தொடர்பு கொண்டதாகவும், வேறு எதுவும் தெரியாது என்றும் முகமது அஷ்மலி  தெரிவித்துள்ளார். …

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம் ஏற்பட்டு உல்லாசம் தர்மபுரி ராணுவ வீரரின் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கடத்தல்: மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்களையும் குறிவைத்து சீரழித்த ஊழியர் கைது

‘ஸ்ரீரங்கம் ஸ்டேசன்ல இருந்து வர்றேன்…’ ஓசி கடலை கேட்டு அடாவடி எஸ்.எஸ்.ஐ அதிரடி சஸ்பெண்ட்