15 பேருக்கு ஓய்வு பெறும் மாதத்தில் பிஎப் ஓய்வூதிய ஆணை: மண்டல ஆணையர் வழங்கினார்

நெல்லை, மார்ச் 1:தனியார் நிறுவனங்களில் பணியாற்றி 58 வயது பூர்த்தியடைந்து பணி ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் மாதத்திலேயே ஓய்வூதிய ஆணை வழங்கும் பிரயாஸ் நிகழ்ச்சி நெல்லை வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடந்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் அலுவலகத்திற்கு கொடுக்கப்பட்ட இலக்கையும் கடந்து 15 ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளை வருங்கால வைப்புநிதி நெல்லை மண்டல ஆணையாளர் சச்சின் டி ஷெட்டி வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் ஷாஜி மற்றும் பென்ஷன் பிரிவு மேற்பார்வையாளர்கள் செல்லப்பா, சிவகாமிநாதன் கலந்து கொண்டனர்.

Related posts

பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாப சாவு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி; 3 பேர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு திடீரென தீப்பிடித்த வேப்பமரம்