இது தொடர்பாக யாதவி ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனரும் தலைமை பயிற்சியாளருமான சதீஷ் சிவகுமார் கூறியதாவது: இந்த சாகச நீச்சலில் ஈடுபட்ட ஒவ்வொரு குழந்தையின் வெற்றியை நோக்கிய வேட்கை மற்றும் மனஉறுதி பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆட்டிசம் உள்ள 14 குழந்தைகளின் இந்த கடல் நீச்சல் பயணம் வெறும் உடல் சார்ந்த சாதனை கிடையாது – இது சமூகத்தில் பலரிடம் உள்ள ஆட்டிசம் பற்றிய பிற்போக்கான சிந்தனையை உடைத்து, ஒவ்வொருவரின் திறமைகளை வெளிக்கொணர்ந்ததற்கு அடையாளமாகவும் இந்த சாதனை அமைந்துள்ளது. மேலும் இந்த நிகழ்வை ஒரு அற்புதமான வெற்றியாக மாற்ற முன்வந்த எஸ்டிஏடி, அதிகாரிகள், முழு பயண உதவிக் குழுவினர், பயிற்சியாளர்கள், மற்றும் பெற்றோர்கள் என அனைவருக்கும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான பிரத்யேக விளையாட்டு பயிற்சி மையமான யாதவி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மனமார்ந்த நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.