ராணிப்பேட்டை: அரக்கோணம் வழியாக எர்ணாகுளம் வரை செல்லும் விரைவு ரயிலில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விரைவு ரயிலின் பொது பெட்டியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் 14 கிலோ கஞ்சா சிக்கியது. கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கர்நாடகாவைச் சேர்ந்த சுப்ரமணியம், அப்துல் ஆகிய இருவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.