சென்னை: 148 பெண்கள் மற்றும் 2 திருநங்கைகளுக்கு புதிய ஆட்டோக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் புதிய ஆட்டோக்களை முதலமைச்சர் வழங்கினார். தொழிலாளர் நலவாரியத்தில் பதிவுபெற்ற பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு மானிய விலையில் ஆட்டோக்கள் வழங்கப்பட்டது.