வேலாயுதம்பாளையம்: புகளூர் நகராட்சி ஆணையர் கனிராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புகளூர் நகராட்சி பகுதியில் அமைந்திருக்கும் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் எதிர்புறம் பொதுமக்களும் பக்தர்களும் தாங்களுக்கு கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வதற்காக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துவதற்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் ஆக்கிரமித்து கடையோ அல்லது தரைக்கடையோ மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.