14 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம்

உளுந்தூர்பேட்டை, ஜூலை 19: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டத்துக்குட்பட்ட 14 கிராம நிர்வாக அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் ஏமம் கிராமத்திற்கு அறிவழகன், மட்டிகை கிராமத்திற்கு ஷாலினி, ஆரிய நத்தம் பழனியம்மாள், மடப்பட்டு சௌரிராஜன், கொரட்டூர் கிராமத்திற்கு சதீஷ்குமார், மூலசமுத்திரம் முத்துக்கருப்பன், காம்பட்டு மணிவாசகம், மேப்புலியூர் கிராமத்திற்கு ஜெகன், பாதூர் கிராமத்திற்கு சுரேஷ், பெரும்பாக்கம் ஜேசுதாஸ், செம்மனந்தல் அசோக்குமார், உ.கீரனூர் ராகேஷ், நகர் கிராமத்திற்கு விமல்பாபு, சிறுளாப்பட்டு கிராமத்திற்கு சண்முகம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்