பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 11: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, மெணசி ஊராட்சிக்கு உட்பட்ட விழுதப்பட்டி கிராமத்தில், கவரமலை வனப்பகுதியில், உணவு கிடைக்காததால் உணவு தேடி விவசாய நிலங்களுக்கு வரும் மான்களை, நாய்கள் துரத்துவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று, விழுதப்பட்டி பகுதியில் கவி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், நாய்கள் கடித்ததில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், இறந்த மானை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு பின் வனப்பகுதியில் புதைத்தனர்.

 

Related posts

சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை அருகே கார்-மினிலாரி மோதல் திருச்சியை சேர்ந்த இருவர் பரிதாப பலி

பலப்படுத்தும் பணி தீவிரம் தொட்டியம் அருகே மரத்திலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு