இதற்காக அவர்கள் நீலகிரிக்கு வந்துள்ளனர். இவர்கள் ஊட்டியில் உள்ள இளைஞர் விடுதியில் தங்கியுள்ளனர்.இம்முகாம் துவக்க விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு நேரு யுவகேந்திரா மாநில இயக்குநர் குலின் அகமது தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா, தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, நீலகிரி மாவட்ட ரெட்கிராஸ் தலைவர் கேப்டன் மணி, நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலர் ஆஷிஷ், பொறுப்பாளர் ரஞ்சித், பிரவீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேற்று துவங்கிய இம்முகாம் வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. இன்று முதல் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, பழங்குடியின மக்கள் வசிக்க கூடிய கிராமங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு இளைஞர்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர். மேலும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் செய்யப்பட்டு வருகிறது.