132வது பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு கட்சி தலைவர்கள் மரியாதை

சென்னை: சட்ட மேதை அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், டி.ஜெயக்குமார், தளவாய் சுந்தரம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மாநில தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் சு.ஜீவன், ராஜேந்திரன், கே.கழக குமார், சைதை ப.சுப்பிரமணி, மா.வை.மகேந்திரன், சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்.ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் துரை, ஆர்.டி.ஐ.பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, கவுன்சிலர் அமிர்தவர்தினி உள்ளிட்ட காங்கிரசார் கலந்து கொண்டனர். சென்னை ராஜாஜி சாலை துறைமுகம் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் திருவேங்கடம், தலைமை நிலைய செயலாளர் டி.என்.அசோகன், கோவிந்தசாமி, முனவர் பாட்ஷா, ராணி கிருஷ்ணன், சைதை நாகராஜ்,  கல்யாணி உள்ளிட்ட தமாகாவினர் கலந்து கொண்டனர்.தொழில்நுட்பகல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்டி பணியாளர் நலச்சங்கம் சார்பில் சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்லூரி இயக்ககத்தில் உள்ள அம்பேத்கர் படத்திற்கு துணை மேயர் மகேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சங்க கவுரவ தலைவர் வி.எம்.வேங்கடவரதன், மாநில தலைவர் டி.மணிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு பொருளாளர் பிரேமலதா மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் கோடைகால தண்ணீர் பந்தலையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தேமுதிக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். துறைமுகம் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை