விருதுநகரில் பட்டாசு விபத்தில் 131 பேர் உயிரிழப்பு

மதுரை: பட்டாசு விபத்தில் 131 பேர் உயிரிழந்தனர் என உயர் நீதிமன்ற கிளையில் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்தார். விருதுநகர் மாவட்டத்தில் 2019 முதல் தற்போது வரை 69 பட்டாசு ஆலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 131 தொழிலாளர்கள் இறந்துள்ளனர் மற்றும் 146 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மாவட்டத்தில் 1087 பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் 2963 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. ஆலைகளில், உரிய பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காதது, ரசாயன கலவையை முறையாக பயன்படுத்தாததால் அதிக விபத்து நடக்கிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு