Thursday, July 4, 2024
Home » 13 பவுன் நகை திருடிய வழக்கில் ஓராண்டிற்கு பின் 2 பேர் கைது

13 பவுன் நகை திருடிய வழக்கில் ஓராண்டிற்கு பின் 2 பேர் கைது

by Ranjith

 

ராசிபுரம், ஏப்.26: ராசிபுரம் அருகே வெண்ணந்தூர், ஹரி நகர் அங்காளம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் கடந்தாண்டு 30.4.2022 அன்று தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். அப்போது வீட்டின் பூடை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், பீரோவில் இருந்த 13பவுன் நகைகளை திருடி சென்றனர். இது குறித்து கந்தசாமி, வெண்ணந்தூர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரை ஏற்கனவே கைது செய்தனர்.

இதில் தொடர்புடையை கடலூர் மாவட்டம் சிதம்பரம், சி.தண்டேஷ்வரநல்லூர், கொய்யாபிள்ளை சாவடியை சேர்ந்த மாதையன் மகன் பிரபு(24), நாமக்கல் மாவட்டம் பரமத்தி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கோவில் மணி(35). ஆகிய இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று பிரபு, கோவில் மணி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

3 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi