சென்னை கொரட்டூரில் வளர்ப்பு நாய் கடித்து 12 வயது சிறுவன் பலத்த காயம்

சென்னை: சென்னை கொரட்டூர் டீச்சர்ஸ் காலனியில் வளர்ப்பு நாய் கடித்து 12 வயது சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சாலையில் நடந்து சென்ற சிறுவனை ராட்வைலர் உள்பட 2 வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியுள்ளன. உடல் முழுவதும் பலத்த காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 வயது சிறுமி நாய் கடித்து காயமடைந்த நிலையில் மீண்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

Related posts

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி