சென்னை: தமிழகத்தில் மே 16 முதல் 21 வரை கனமழை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பேரிடர் மேலாண்மைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் இடி, மின்னல் தாக்கியதன் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 19 கால்நடைகள் இறந்துள்ளன 55 குடிசைகள்/வீடுகள் சேதம் அடைந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.