Thursday, June 27, 2024
Home » 1,250 டன் ரேஷன் அரிசி காட்பாடி வருகை லாரிகள் மூலம் திருப்பத்தூருக்கு அனுப்பி வைப்பு திருவாரூரில் இருந்து ரயில்கள் மூலம்

1,250 டன் ரேஷன் அரிசி காட்பாடி வருகை லாரிகள் மூலம் திருப்பத்தூருக்கு அனுப்பி வைப்பு திருவாரூரில் இருந்து ரயில்கள் மூலம்

by Karthik Yash

வேலூர், ஜூன் 7: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக திருவாரூரில் இருந்து 1,250 டன் ரேஷன் அரிசி ரயிலில் நேற்று காலை காட்பாடிக்கு வந்தடைந்தது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோக திட்டத்தின்கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு விநியோகிக்கும் வகையில் தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கு ரேஷன் அரிசி பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 1,250 டன் ரேஷன் அரிசி திருவாரூர் மாவட்டத்தில் இருந்து நேற்று காலை காட்பாடிக்கு ரயிலில் வந்தடைந்தது. இங்கிருந்து லாரிகள் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து லாரிகள் மூலம் தாலுகா வாரியாக உள்ள ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்யப்படும். அதேபோல் ரேஷன் கடைகளுக்கு இம்மாதத்துக்கான பாமாயில், துவரம் பருப்பு ஆகியவற்றை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த வாரம் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தலா ₹1,250 டன் ரேஷன் அரிசி தஞ்சாவூரில் இருந்த ரயில் மூலம் காட்பாடிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

one × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi