அரூர், மே 4: அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனை குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 48 விவசாயிகள் 125 மஞ்சள் மூட்டைகளை எடுத்து வந்திருந்தனர். இந்த மஞ்சளை கொள்முதல் செய்ய சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். ஏலத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ₹14,699 முதல் ₹18,589 வரையும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் ₹14,299 முதல் ₹16,470 வரையிலும் விற்பனையானது. ஒட்டுமொத்தமாக நேற்றைய ஏலத்தில் ₹12.50 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது என அதிகாரிகள் தெரிவித்தனர்.