சென்னை: கூடுதல் கட்டணம் வசூல் புகாரில் பறிமுதல் செய்யப்பட்ட 120 ஆம்னி பேருந்துகள் விடுவிக்கப்படவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். பேருந்துகளை விடுவிக்க கோரி ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் போக்குவரத்து ஆணையரை சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடத்தியும் பேருந்துகள் விடுவிக்கப்படாததால், உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.