இதை பயன்படுத்தி அவர், நண்பர் ரகுவுடன் சேர்ந்து ராமாராவ் நிலத்தில் மகசூலை விற்றதோடு, அனுமதியின்றி விவசாயம் செய்து வந்துள்ளார். இதனையறிந்த ராமாராவ் கடந்த ஏப்ரலில் கொடைக்கானலுக்கு வந்து, தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், ரகு, பாஜ பிரமுகர் பிரபுதேவா மற்றும் சிலர், அவரை தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து ராமாராவ் புகாரின்படி கொடைக்கானல் போலீசார் கடந்த செப்.16ம் தேதி வழக்குப்பதிந்து ராமாராவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்ற விஜயகுமார், ரகு, பாஜ பிரமுகர் பிரபுதேவா ஆகியோரை கைது செய்தனர். உடந்தையாக இருந்த மேலும் சிலரை தேடி வருகின்றனர்.