விற்பனையை ஈடுகட்ட வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. மது பழக்கத்தில் இருந்து ஒருவர் விடுபட்டு அதன் மூலம் விற்பனை குறைந்தால் இந்த அரசு மகிழ்ச்சியடையும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்த காரணத்தால் 46 டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க 12 ஆயிரம் பில்லிங் மெஷின்கள் வாங்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளிலும் பில்லிங் மெஷின் வைக்கப்பட்டு விட்டால் கூடுதல் விலைக்கு விற்பது முற்றிலும் தடுக்கப்படும். விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும். சம்பள உயர்வு தொடர்பாக டாஸ்மாக் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. டிஜிட்டல் பேமண்ட் திட்டமும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.