Monday, September 30, 2024

by Suresh

குடியாத்தம், மே 4: குடியாத்தம் அருகே ராணுவ வீரர்களின் வீடுகள் உட்பட அடுத்தடுத்து 4 வீடுகளில் 20 சவரன், ₹1.50 லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். குடியாத்தம் அடுத்த ரயில்வே நிலையம் பகுதியில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்து வருபவர் உயர்ந்தவன். இவரது சகோதரர் வீரன் மற்றும் மதியழகன் ஆகிய 3 பேரும் தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் ராணுவ வீரர்கள். இந்நிலையில் உயர்ந்தவன் மற்றும் வீரன் ஆகியோர் வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றனர். மதியழகனும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில், மதியழகன் நேற்று வீடு திரும்பியபோது 3 பேரின் வீடுகளில் முன்பக்க கேட் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே, டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர். இதில் மதியழகன் வீட்டில் பிரோவில் வைத்திருந்த 3 சவரன், ₹25 ஆயிரம் மற்றும் உயர்ந்தவன் வீட்டில் ஒரு சவரன், ₹10 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் வீரன் வீட்டில் 12 சவரன், ₹1 லட்சம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

மேலும், குடியிருப்புக்கு அருகே வசித்துவரும் மகேஸ்வரி என்பவரது வீட்டிலும் 4 சவரன் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடிசென்றது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மர்மநபர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை, பணம் திருடிச்சென்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

5 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi