10ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் மறுமதிப்பீடு முடிவுகள் வரும் 21-ம் தேதி வெளியீடு

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் வரும் 21-ம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ஜூன்-24 முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம். அறிவியல் செய்முறைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு 25, 26 தேதிகளில் செய்முறைத்தேர்வு நடைபெறும்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது