டொமினிகனில் மர்மபொருள் வெடித்து 10 பேர் பலி

சான் கிறிஸ்டோபல்: கரீபியன் தீவுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசின் தலைநகரான சான் கிறிஸ்டோபலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப் பகுதியில் நேற்று முன்தினம் மர்மபொருள் வெடித்தது. ஒரு கட்டிடத்தின் உள்ளே நிகழ்ந்த இந்த சக்திவாய்ந்த வெடிப்பை தொடர்ந்து அருகில் இருந்த கடைகளில் தீ பரவியது. இதில், 4 மாத குழந்தை உட்பட 10 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்தனர். 11 பேர் காணவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது