வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ஜனதாபுரத்தில் 104 வயது அக்கா இறந்த துக்கத்தில் 102 வயது தம்பியும் உயிரிழந்தார். ஜனதாபுரத்தில் 104 வயது மூதாட்டி வள்ளி அம்மாள் நேற்று மாலை 5 மணிக்கு உயிரிழந்தார். அக்கா இறந்த துக்கம் தாளாமல் நேற்றிரவு அவரது தம்பி துரைசாமி உயிரிழந்தார். உயிரிழந்த துரைசாமியின் மகன் அண்ணாமலை என்பவர் செட்டியப்பனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார்.