இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரபுசங்கர் தலைமை தாங்கினார். 2 கி.மீ தூரத்திற்கு நீண்டிருந்த மனித சங்கிலி இயக்கத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது கைகளை கோர்த்தபடி ஆர்வத்துடன் பங்கேற்றனர். அப்போது, தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த மனித சங்கிலி இயக்கத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள், எனது வாக்கு எனது உரிமை, தவறாமல் வாக்களிப்பது வாக்காளர் கடமை, நமது இலக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவு, தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா, ஓட்டுக்கு வாங்க மாட்டோம் நோட்டு, என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கைகளில் ஏந்தி முழக்கமிட்டனர்.
* நேர்மையான நபரை தேர்வு செய்ய வேண்டும்
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் கரகாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையர் த.வ.சுபாஷினி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான த.பிரப சங்கர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, வாக்களிப்பது ஜனநாயக கடமை. நேர்மையாக, நியாயமாக, சரியான நபரை தேர்ந்தெடுக்க அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் அதுவும் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராணி, வட்டாட்சியர் வாசுதேவன், நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ், வருவாய் அலுவலர் கருமாரியப்பன் உட்பட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது கட்டாயம் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.