அதன் ஒருபகுதியாக, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணகண்ணன் தலைமையிலும், வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி முன்னிலையிலும் நேற்று நடைபெற்றது. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துக்கொண்டு, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டதோடு, கையெப்பமிட்டனர். நிகழ்வின்போது, மண்டல துணை வட்டாட்சியர் புவனேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் முரளி, கிராம நிர்வாக அலுவலர் நளினி, தனியார் நிறுவனத்தின் மனிதவள மேலாளர்கள் சரவணன், மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.