சென்னை: தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்காக ரூ.949 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை செயலாளர் அமுதா நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்படி 100 நாள் வேலை திட்டத்திற்காக 2021-22ம் ஆண்டுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக இந்த நிதியாண்டு தமிழக அரசு ரூ.949 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒன்றிய அரசு சார்பில் 75 சதவீத நிதியாக ரூ.674.84 கோடியும், மாநில அரசு சார்பில் 25 சதவீத நிதியாக ரூ.224.94 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது….
100 நாள் வேலை திட்டம் ரூ.949 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
previous post